ஈராக்கின் இர்பிலில் பதற்றம்! 8 வெடிகுண்டு ட்ரோன்கள் அதிரடியாகச் சுட்டு வீழ்த்தல்!

0
5

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள இர்பில் (Erbil) நகரில், இன்று அதிகாலை பறக்கவிடப்பட்ட 8 வெடிகுண்டு ட்ரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள ஈரானிய எதிர்க்கட்சி குழுக்கள் தெரிவித்துள்ளன.

இர்பில் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள அலானா பள்ளத்தாக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள ஈரானிய எதிர்க்கட்சிகளை இலக்கு வைத்தே இந்த ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குர்திஸ்தானின் புகழ்பெற்ற ‘ருடாவ்’ (Rudaw) ஊடக அமைப்பின் அறிக்கையின்படி, பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

“இன்று அதிகாலை வேளையில், இர்பில் நகரின் வான்பரப்பில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 8 ஆபத்தான ட்ரோன்களைக் கூட்டணிப் படைகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளன.”

இந்தத் திடீர் தாக்குதல்களில் இதுவரை எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.
அதேவேளையில், இந்த ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருக்கிறதா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here