லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த அமெரிக்கா முயற்சி: ஓமானுக்கான முன்னாள் தூதுவர் நம்பிக்கை!

0
10

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து ஓமானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரிச்சர்ட் ஷ்மியரர் நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு வாஷிங்டன் தீவிரமாக முயன்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பு இடமிருந்து கடுமையான இராணுவப் பதில் தாக்குதலைத் தூண்டும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்ரேல், லெபனானில் முன்னெடுக்காமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வாஷிங்டன், அமெரிக்க இராணுவம் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா ஏற்கனவே இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தற்போதைய போர்நிறுத்தம் (Ceasefire) நிலைபெறுவதை அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தை இஸ்ரேல் புரிந்து கொண்டுள்ளது என்றே தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நாளை பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் போது, அங்கு ஒரு முறையான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும், இதனால் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் மாறும் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த நிலைமைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here