‘ஜெய் பீம்’ படத்தின் மாபெரும் விமர்சன ரீதியான வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான “ஹோம்பாலே பிலிம்ஸ்” இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
சூர்யாவின் சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘கருப்பு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்த புதிய மெகா ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா ஜோடியாக காயடு லோஹர் நடிக்கிறார்.

