26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக குறைத்துள்ளது.
ஈரான் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதால் மத்திய கிழக்கில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஈரான் போரினால் ஹார்முஸ் பாதையை தவிர்த்துவிட்டு சவுதி தனது ஏற்றுமதியை செங்கடலின் யான்பு துறைமுகத்திற்கு மாற்றியமைத்தது.
தற்போது பதற்றங்கள் தணிந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் சீரடையத் தொடங்கியுள்ளது.
இதனால் சவுதியின் முக்கிய தளமான ராஸ் தனுராவில் இருந்து ஏற்றுமதி 90 சதவீத அளவுக்கு மீண்டும் நடக்க தொடங்கியுள்ளது.

