மலேசியாவைச் சேர்ந்த விமானி ஒருவர், தனது பயணப் பையில் (Suitcase) 70,000 எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகளைக் கடத்த முயன்றபோது ஜகார்த்தா விமான நிலையத்தில் பிடிபட்ட காட்சி சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான காட்சிகளை அதிகாரிகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர்.
அந்த வெள்ளி நிறப் பயணப் பையிலிருந்து, சுமார் 26 கிலோகிராம் (4 ஸ்டோன்) எடையுள்ள போதைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பல பைகளை விமான நிலைய அதிகாரிகள் வெளியிலெடுப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
