இசையமைப்பாளர் இளையராஜாமற்றும் சரிகம நிறுவனத்திற்கு இடையே 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு காப்புரிமை தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கில், 1976 முதல் 2001 வரை இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தமானவை என்று சரிகம நிறுவனம் வாதிட்டுள்ளது. அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுடன் சட்டப்பூர்வமான ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய மற்றும் நிரந்தர காப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

