அரசு மருத்துவமனைகளுக்கு 195 கோடி ரூபாயில் அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள்!

0
6

நாட்டின் பொது சுகாதாரத் துறையை நவீனமயமாக்கி, மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில் 1,950 மில்லியன் ரூபாய் (195 கோடி ரூபாய்) செலவில் 11 அதிநவீன சி.டி. ஸ்கேன் (CT Scan) இயந்திரங்களைக் கொள்வனவு செய்து அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் திட்டத்தைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:

தீவிர நோய் கண்டறிதல்:
பக்கவாதம், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற தீவிர நோய்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, தாமதமின்றிச் சிகிச்சையளிக்க இந்த இயந்திரங்கள் உதவும்.
முதற்கட்டப் பயன்பாடு:இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்ட பொது மருத்துவமனைகளில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கை: திட்டமிடப்பட்டுள்ள ஏனைய மருத்துவமனைகளிலும் எஞ்சிய இயந்திரங்கள் விரைவில் பொருத்தப்பட்டு, நோயாளர் பராமரிப்புச் சேவைகள் விரிவுபடுத்தப்படும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here