நாளை ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) இடம்பெறவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அன்னசத்திர மண்டபத் திறப்பு விழாவில் தமிழகத்தின் பிரபல ஆன்மீக, இலக்கியப் பேச்சாளர் செந்தமிழ்ச் சுடர்.கி.சிவக்குமார் நேரடியாகப் பங்கேற்றுச் சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று (11.07.2026) சற்றுமுன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ். வருகை தந்த இலக்கியப் பேச்சாளர் சிவகுமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

