மத்திய பிலிப்பைன்ஸின் டக்லோபன் (Tacloban) நகரிலுள்ள சான் ஜோஸ் தேசிய உயர்நிலைப் பள்ளியில் (San Jose National High School), சக மாணவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்
பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட “பழிவாங்கும் உணர்ச்சி” மற்றும் “கேலி வதை” (Bullying) எனப்படும் கொடுமைப்படுத்துதலே இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது.

