போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் போலி கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கொன்றுக்கு அமைவாக, நீதவானால் காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்க இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

