மியாமி மைதானத்தில் ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில், பிரேசில் தேசிய அணிக்கு நெய்மரின் மீள்வருகை என்பது ஒரு சாதாரண வீரர் மாற்றத்தை விடவும் மிகப் பெரிய நிகழ்வாக, உலகளாவிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நான்காவது நடுவர் பலகையை உயர்த்த, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் சீருடையை 981 நாட்கள் அணியாமல் இருந்த பத்தாம் எண் வீரர், 76-வது நிமிடத்தில் களமிறங்கினார்.
அதன் தாக்கம் உடனடியாக இருந்தது என்றும் நடைமுறையில், நெய்மரின் மீள்வருகை குறித்த சர்வதேச ஊடகக் கவனத்தால், வினிசியஸ் ஜூனியரின் கோல்களும் பிரேசிலின் வெற்றியும் பின்னுக்குத் தள்ளப்பட்டன எனவும் கூறப்படுகிறது.

