இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
அதன் தொடர்ச்சியாக, இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சீவர் பிரண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய பெண்கள் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 83 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து தீப்தி சர்மா 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

