லெபனானில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் மீது ஈரான் ‘கடுமையான அழுத்தத்தை’ பிரயோகித்து வருவதாக கட்டார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல்லா பந்தர் அல் எதைபி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்:
சந்தைகளில் உடனடி பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக டிரம்ப் தனது பதவிக்காலத்தில் வாரயிறுதி நாட்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உத்தியைக் கையாள்வார்.
தற்போது அதே பாணியிலான வாரயிறுதி உத்தியை ஈரானும் கையாளத் தொடங்கியுள்ளது.
சர்வதேச எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை லெபனான் விவகாரத்தோடு ஈரான் இணைத்துப் பார்க்கிறது.
லெபனானில் நடக்கும் அனைத்துப் போர்களும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் அப்போதுதான் ஹோர்முஸ் நீரிணையில் வழக்கம் போல் கப்பல் போக்குவரத்து சீராக நடைபெற அனுமதிக்கப்படும் என்ற அழுத்தமான கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது.

