முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகளை பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமானால் வழங்கப்படும் பொலிஸ் உயரிய மரியாதைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொலிஸ் மரியாதைகளுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளன.
அவரது உடலம் தற்போது கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

