அண்மைய சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குவிந்த மக்களில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 24) வரலாறு காணாத அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகும் நிலையில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.இதனால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பிரான்ஸில் வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் மக்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 18 ஆம் திகதி முதல் 40 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
