நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 53159 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் மாத்திரம் 18,227 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

