டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குதல், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
டெங்கு பரவல் காரணமாக அண்மைய நாட்களில் பல பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

