கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
இயற்கை வள அமைச்சு இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. மேகமூட்டமான வானிலை மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் நிலைமை இன்னும் மிகவும் ஆபத்தானதாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தண்டர் பே நகருக்குச் சென்று தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

