இலங்கை டெஸ்ட் அணியில் நிரோஷன் டிக்வெல்ல மீண்டும் இணைக்கப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
டிக்வெல்லவின் தேர்வு தொடர்பாகப் பல விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கருணாரத்ன, அவரது திறமை மற்றும் நீண்ட வடிவ போட்டிகளிலுள்ள அனுபவத்தைக் கருத்திற் கொண்டே தேர்வாளர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், தற்போதைய திறமை மற்றும் துடுப்பாட்டத் திறனின் அடிப்படையில் அஞ்சல பண்டார மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரே டிக்வெல்லவை விட முன்னிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 3 வருட சர்வதேச இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள டிக்வெல்லவுக்கு, இந்த தொடர் தனது திறமையை நிரூபிக்கவும், தனது டெஸ்ட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் ஒரு மிக முக்கியமான வாய்ப்பாகும்.
தனது முன்னாள் சக வீரருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த கருணாரத்ன, இது டிக்வெல்லவின் வாழ்க்கையிலேயே மிகவும் சவாலான மற்றும் முக்கியமான தொடராக அமையலாம் எனக் கூறியுள்ளார்.
