உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!

0
2

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தொடரும் போர் முட்டுக்கட்டை காரணமாக சர்வதேச சந்தைகளும் பிராந்திய ஸ்திரத்தன்மையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

கடந்த ஜூன் 17 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த நீண்டகால நெருக்கடியின் மையப் புள்ளியாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5ஆவது சரத்து, இந்த நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்குப் பிணையளித்த போதிலும், ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே வளைகுடாப் பகுதி முழுவதும் உள்ள இராணுவ முகாம்கள் மீது இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.

ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடையும் நிலையில், மத்தியஸ்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

போரை நிறுத்தவும், நீரிணையின் வழியை மீண்டும் திறக்கவும் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெஹ்ரானுக்கு விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கண்டிப்பான நிபந்தனைகளில் ஈரான் உறுதியாக உள்ளது.

அதேவேளையில், அமெரிக்க ஜனாதிபதி போரைத் தீவிரப்படுத்துவது மற்றும் விரைவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற இருவேறு கருத்துக்களை மாறி மாறித் தெரிவித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here