பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக அப்பதவியில் இருந்த மெஹிதி ஹசன் மிராசிடமிருந்து அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்த முடிவின் மூலம் பங்களாதேஷ் அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் என இரண்டு வடிவங்களின் முழுமையான தலைமைப் பொறுப்பும் லிட்டன் தாஸிடம் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தின் தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பங்களாதேஷ் இழந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ டெஸ்ட் அணியின் தலைவராகத் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

