காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சமீபத்திய உயிரிழப்பாகும், மற்றையவர் முன்னர் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் சில உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் அல்லது சாலைகளில் கிடப்பதாகவும், அவர்களைக் காவற்துறை மற்றும் மீட்புக் குழுக்களால் சென்றடைய முடியவில்லை என்றும் அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை 1,209 இறப்புகளும், 3,943 காயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இடிபாடுகளுக்குள்ளிருந்து 803 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 2023 இல் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தமாக 73,335 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 174,052 பேர் காயமடைந்துள்ளனர்.

