ஹோர்முஸ் நீரிணை : ஓமானின் கூட்டு மேலாண்மை திட்டத்தை ஈரான் நிராகரித்தது ஏன்?

0
5

ஹோர்முஸ் நீரிணையை கூட்டாக நிர்வகிக்கும் ஓமானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதானது, நிதி சார்ந்த பலன்களை விட அதன் ராணுவ மற்றும் மூலோபாயக் கட்டுப்பாட்டிற்கான உந்துதலையே பிரதிபலிப்பதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வாளர் சஷா ப்ருச்மேன் அல் ஜசீராவிடம் கூறுகையில், ஈரானின் இலக்கு மாறாமல் அதன் கோரிக்கைகள் காலப்போக்கில் மாறியுள்ளன என்றார்.

ஈரான் முதலில் சுங்கக் கட்டணம் கேட்டது, பின்னர் மலாக்கா நீரிணையைப் போன்ற சேவைக் கட்டணமாக மாற்றியது, தற்போது தன்னிச்சையான கட்டணம் பற்றிப் பேசி வருகிறது.

நீரிணையின் மீது தமது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஐம்பதுக்கு ஐம்பது என்ற கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஈரான் நிராகரித்ததற்குக் காரணம், அது ஒரு கப்பல் பாதையை அவர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே விட்டுவிடும் என்பதால் தான்.

இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பது தொடர்பானது அல்ல, மாறாக முற்றிலும் ராணுவ மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையது என்று ப்ருச்மேன் குறிப்பிட்டார்.

வாஷிங்டனிடமிருந்து விலகி, வளைகுடா நாடுகளுடன் ஒரு தனிப்பட்ட புரிதலை எட்டுவதற்கும், ஒவ்வொரு மோதல்கள் மற்றும் நெருக்கடிகள் வழியாக தனது நிலையை படிப்படியாக வலுப்படுத்தவுமே ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here