இந்த ஆண்டில் மட்டும் 3,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது!

0
3

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலியப் படைகளால் 3,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாகவும், எந்தவொரு குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்படும் நிர்வாகக் காவலில் முன்னோடியில்லாத அளவுக்கு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் 3,244 பாலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், இது சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைகளுக்கு உள்ளேயும் சித்திரவதைகள், பட்டினி கிடத்தல், மருத்துவப் புறக்கணிப்பு மற்றும் நோய்களின் பரவல் காரணமாக கைதிகளின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன கைதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here