டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

0
6

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,905 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த மாதத்தில் நேற்று (24) வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 25,530 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 17,135 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here