110 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது!

0
4

சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 79 வயதான ஸ்பெயின் நாட்டுப் பிரஜை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாயப் பொறியியலாளரான இவர், கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து (Sierra Leone) அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாகக் கட்டார் எயார்வேஸுக்குச் சொந்தமான QR654 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கையடக்கப் பையாகக் கொண்டு வந்த பயணப் பையைச் சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்திய போதிலும், அதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அவரது மற்றொரு பயணப் பை அந்த விமானத்தில் வராத காரணத்தினால், வழக்கமான வருகைக்கான நடைமுறைகளை முடித்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தாமதமான அந்தப் பயணப் பை பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதனைப் பொறுப்பேற்பதற்காகச் சந்தேகநபர் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here