ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் அடித்து அவுட்டானார்.
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அவுட்டானார்.
இதன்மூலம் குறைந்த வயதில் முதல் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இவருக்கு முன், சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாள்களில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

