ஹோர்முஸ் நீரிணை முடக்கம் – உலக சந்தையில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்வு

0
8

அமெரிக்கா – ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(13.07.2026) எண்ணெய் விலைகள் 4% க்கும் மேல் உயர்வடைந்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 0325 GMT நிலவரப்படி, 3.10 டொலர் (4.08%) உயர்ந்து, 79.11 ஆக டொலராக காணப்பட்ட நிலையில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.95 டொலர் (4.11%) உயர்ந்து 74.36 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் நேற்று(12) ஈரானுக்கு எதிரான மற்றொரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இன்று(13) அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here