பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் சுவிட்சர்லாந்து பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் மொஷாரஃப் ஜைதி தெரிவித்துள்ளார்.
‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ ஏற்கனவே மின்னணு முறையில் கையெழுத்தாகி, நடைமுறைக்கு வந்துவிட்டதால் இப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருவதால், இதன் அடுத்தகட்ட தொழில்நுட்ப ரீதியிலான பணிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

