தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என். பி.எல். ( தமிழ்நாடு பிரீ மியர் லீக்) போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 9 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கோவை கிங்ஸ் 2 தடவையும் (2022, 2023), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), திண்டுக்கல் டிராகன்ஸ் (2024), திருப்பூர் தமிழன்ஸ் (2025) ஆகியவை தலா ஒரு முறையும் கோப்பையை வென்று உள்ளன.
10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை 2 கட்டமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
முதல் கட்ட போட்டிகள் நாளை முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.
