நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பொறுப்பேற்றுள்ளமை ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், ஜனநாயக ரீதியாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என்றே நாம் நம்புகிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மாபெரும் மக்கள் குரல் அமைப்பின் காரியாலயத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற மோதலானது இரண்டு முக்கிய கட்டங்களைக் கொண்டது. முதலாம் நாள் மோதலானது சிறைச்சாலைக்குள் நிலவும் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களைச் சில கைதிகள் வெளியிட்டதால், கடத்தல்காரர்களுக்கும் தகவல் கொடுத்த கைதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

