கொழும்பில் Parking கட்டணம் ரத்து? வாகன ஓட்டிகளுக்கு கொழும்பு மாநகர சபையின் எச்சரிக்கை

0
6

கொழும்பு நகருக்குள் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்க் கூற்றுகளை கொழும்பு மாநகர சபை (CMC) நிராகரித்துள்ளது.

குறித்த கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை தெளிவுபடுத்தியுள்ளது.

வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் வீடியோக்கள் “போலிச் செய்திகள்” என்று, கொழும்பு மாநகர சபை கூறியுள்ளது.

சமீபத்தில் வைராலாகப் பரவிவரும் வீடியோ, எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளால் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காக, இவ்வாண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதியன்று, வாகன நிறுத்துமிடக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ என்று சபை விளக்கியுள்ளது.

இருப்பினும், அரசாங்கம் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மற்றும் ஒற்றை-இரட்டை வாகன எண் முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, வரிசைகள் குறைந்ததால், கொழும்பு மாநகர சபை தனது நிதிக் குழுவின் ஒப்புதலுடன், மார்ச் 23 காலை 6 மணி முதல் தனது வழக்கமான வாகன நிறுத்துமிட மேலாண்மை மற்றும் கட்டண வசூலை மீண்டும் தொடங்கியது.

எனவே, கொழும்பு நகருக்குள் வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், உரிய வாகன நிறுத்துமிடக் கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்துமாறு கொழும்பு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here