ஈரானிய ரியாலின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், நாட்டின் கரன்சி மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு “தற்காலிகமானது தான்” என்று ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது “பொருளாதாரப் போரை” தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஈரானிய ரியால் தனது மதிப்பில் சுமார் 10 சதவீதத்தை இழந்துள்ளது.
மாநிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ உரையில் பேசிய ஹெம்மாட்டி, “இந்த விலை அதிகரிப்புகள் தற்காலிகமானவை, அதாவது சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் “அரசியல் பிரச்சாரமே” முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், “நிலைமை விரைவில் சீரடைந்து, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

