தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்

0
9

சிலோன் டீ வில்லேஜ்” (Ceylon Tea Village) எனப்படும் 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், 23.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மேலதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, ஆரம்ப கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 144 தேயிலை கிராமங்களில் முன்மாதிரி தேயிலைச் செய்கைகளை அமைப்பதற்காக 6.8 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

மேலும், தரமான தேயிலை நாற்றுகளை உற்பத்தி செய்வதற்காக 16.9 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் பதப்படுத்தப்பட்ட தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்த்துவதே “சிலோன் டீ வில்லேஜ்” திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here