அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி (Esmaeil Baghaei) ஊடகங்களிடம் கூறுகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவின் பணிகள் தற்போது “நிறைவடைந்துள்ளன” என்றும், இனி தொழில்நுட்பக் குழுக்கள் தங்கள் பணியைத் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான விஷயங்கள் குறித்து தொழில்நுட்பக் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றுவது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கட்டத்தில், முதன்மை பேச்சுவார்த்தைக் குழுவின் பணி நிறைவடைந்துள்ளது, ஆனால் தொழில்நுட்பக் குழுக்கள் நாளை தங்கள் பணிகளைத் தொடரும், என்று அவர் கூறினார்.
