தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

0
4

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் தந்தை செல்வா ஆகியோருக்கிடையிலான நீண்டகால நட்புறவு நினைவுகூரப்பட்டது.

அத்துடன், இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக தந்தை செல்வா, சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தமை உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

மேலும், தந்தை செல்வாவின் நினைவைப் போற்றும் வகையில் மலையகத்தில் சிரார்த்த தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மேற்கொள்ளும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here