அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பதிலும் நிலவிய நம்பிக்கைகள் மங்கியுள்ளதால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஈரானிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழப்பீடு கோரியதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 1.73 டொலர் உயர்ந்து 89.45 டொலராகவும், WTI மசகு எண்ணெய் 1.91 டொலர் உயர்ந்து 84.04 டொலராகவும் விற்பனையாகிறது.
இது ஜூலை 31-க்குப் பிறகான மிக உயர்ந்த விலையாகும்.

