இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், காயம் காரணமாக வரவிருக்கும் மகளிர் ஆசியக் கிண்ணம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் விளையாடியபோது, ஜெமிமாவுக்குத் தொடையில் கடுமையான காயம் ஏற்பட்டது.
பெங்களூருவில் உள்ள மருத்துவக் குழு இதனை உறுதி செய்துள்ளது.
ஜெமிமாவுக்குப் பதிலாக பிரதிகா ராவல் இந்திய ஆசியக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தொடர் ஆகஸ்ட் 28 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகளுடன் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 5 அன்று துபாயில் நடைபெறும் முக்கியப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 3 வரை டி20 வடிவில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
முதன்மை வரிசையிலுள்ள இந்திய அணி, காலிறுதியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

