
கடந்த 24 மணிநேரத்தில் காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு எட்டப்பட்ட “போர்நிறுத்தத்திற்கு”ப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 1,260 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4,154 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 73,389 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,74,266 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
