தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள சொக்கோ (Chocó) மாகாணத்தில், சான் ஜோஸ் டெல் பால்மர் (San José del Palmar) பகுதிக்கு அருகில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது
குறிப்பாக, கலி (Cali) நகரில் மட்டும் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கிப் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

