கனேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்குடன் தொடர்புடையவரும், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவருமான இசாரா செவ்வந்தி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார்.
விசாரணைகளின் பின்னர், அவர் இன்றைய தினம் (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


