கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

0
3

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் நேற்று (04) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here