ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

0
6

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது இரவு நேரத் தாக்குதல் இதுவாகும். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மூன்று சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் ‘பதிலடியாகவே’ இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here