இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

0
8

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பை பயின்று வந்த மான்னமரக்கலகே நதுனி சஹஸ்ரீ குரே என்ற 26 வயதுடைய பெண் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளம் பெண் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, அவர் இவ்வீட்டிலிருந்து தனது கல்வி நடவடிக்கைகளையும், மேலதிகமாக சட்டத்தரணி ஒருவரின் நீதிமன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் சம்பவமா? என்பது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here