சுரேஸ் சலே புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்ள தீர்மானித்துள்ளார். அவர் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

