இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மால்லா எம்’ஜித் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்த போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

