எரிபொருள் விநியோகத்தில் QR கட்டுப்பாடு தொடரும்

0
27

எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் எரிபொருள் நுகர்வை இயன்றவரை கட்டுப்படுத்தி சீரான விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், எரிபொருள் பயன்பாட்டை கண்காணித்து தேவையற்ற வீண்வினையை தவிர்க்க QR முறைமை முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here